Proverbs 11
1கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 1
2அகந்தை வந்தால் அவமானமும் வரும்; 1 தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 1
3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; 1 துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 1
4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1
5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; 1 துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். 1
6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; 1 துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். 1
7துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; 1 அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். 1
8நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; 1 அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 1
9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; 1 நீதிமானோ அறிவினால் தப்புகிறான். 1
10நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; 1 துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். 1
11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; 1 துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும். 1
12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; 1 புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். 1
13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; 1 ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். 1
14ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; 1 அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். 1
15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; 1 பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். 1
16நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; 1 பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். 1
17தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; 1 கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். 1
18துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; 1 நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 1
19நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, 1 தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். 1
20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; 1 உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். 1
21கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; 1 நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 1
22மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், 1 பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். 1
23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; 1 துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். 1
24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; 1 அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் 1 வறுமையடைபவர்களும் உண்டு. 1
25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; 1 எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். 1
26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; 1 விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 1
27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; 1 தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 1
28தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; 1 நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். 1
29தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; 1 மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். 1
30நீதிமானுடைய பலன் ஜீவமரம்; 1 ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். 1
31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் 1 பாவிக்கும் எத்தனை அதிகம்.