Proverbs 21
1ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; 1 அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். 1
2மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; 1 யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார். 1
3பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம். 1
4மேட்டிமையான பார்வையும், 1 அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், 1 பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும். 1
6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது 1 சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும். 1
7துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், 1 அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள். 1
8குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; 1 சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன். 1
9சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, 1 வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். 1
10துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; 1 அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது. 1
11பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; 1 ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். 1
12நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; 1 துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். 1
13ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், 1 தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். 1
14இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; 1 மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். 1
15நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், 1 அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். 1
16விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். 1
17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; 1 மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. 1
18நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், 1 செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். 1
19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1
20வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; 1 மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். 1
21நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் 1 நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். 1
22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, 1 அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். 1
23தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் 1 தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். 1
24அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், 1 அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான். 1
25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், 1 அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். 1
26அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; 1 நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான். 1
27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; 1 அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும். 1
28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; 1 செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான். 1
29துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; 1 செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான். 1
30யெகோவாவுக்கு விரோதமான 1 ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. 1
31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; 1 வெற்றியோ யெகோவாவால் வரும்.