Proverbs 25
1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் 1 பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 1
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; 1 காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 1
3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், 1 ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. 1
4வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, 1 அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும். 1
5ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, 1 அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். 1
6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; 1 பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே. 1
7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; 1 அவன் உன்னைப் பார்த்து: 1 மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. 1
8வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; 1 முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, 1 நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. 1
9நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, 1 மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. 1
10மற்றப்படி அதைக் கேட்கிறவன் 1 உன்னை நிந்திப்பான்; 1 உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது. 1
11ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை 1 வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம். 1
12கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், 1 பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம். 1
13அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; 1 அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான். 1
14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் 1 மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். 1
15நீண்ட பொறுமையினால் 1 பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; 1 இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். 1
16தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; 1 அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். 1
17உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, 1 அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே. 1
18பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் 1 தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன். 1
19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது 1 உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். 1
20மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், 1 குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், 1 வெடியுப்பின் + 25:20 காயத்தின் மேல் உப்பு. காரத்தை/ வலியை அதிகமாக்கும்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். 1
21உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், 1 அவனுக்கு சாப்பிட உணவு கொடு; 1 அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. 1
22அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; + 25:22 நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய் 1 யெகோவா உனக்குப் பலனளிப்பார். 1
23வடகாற்று மழையையும், 1 புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். 1
24சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, 1 வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். 1
25தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி 1 தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம். 1
26துன்மார்க்கர்களுக்கு முன்பாக 1 நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும். 1
27தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, 1 தற்புகழை நாடுவதும் புகழல்ல. 1
28தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் 1 மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.