Job 13
1இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, 1 என் காது கேட்டு அறிந்திருக்கிறது. 1
2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; 1 நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. 1
3சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; 1 தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். 1
4நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; 1 நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். 1
5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; 1 அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். 1
6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, 1 என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். 1
7நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, 1 அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? 1
8அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? 1 தேவனுக்காக வழக்காடுவீர்களோ? 1
9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? 1 மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? 1
10நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், 1 அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். 1
11அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? 1 அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? 1
12உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; 1 உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம். 1
13நீங்கள் மவுனமாயிருங்கள், 1 நான் பேசுகிறேன், 1 எனக்கு வருகிறது வரட்டும். 1
14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, 1 என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்? 1
15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், 1 அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன். 1
16அவரே என் பாதுகாப்பு; 1 மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான். 1
17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், 1 உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள். 1
18இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; 1 என் நீதி விளங்கும் என்று அறிவேன். 1
19என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? 1 நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே. 1
20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; 1 அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். 1
21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1
22நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; 1 அல்லது நான் பேசுவேன்; 1 நீர் எனக்கு மறுமொழி சொல்லும். 1
23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? 1 என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். 1
24நீர் உமது முகத்தை மறைத்து, 1 என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்? 1
25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? 1 காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? 1
26மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; 1 என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர். 1
27என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, 1 என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; 1 என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர். 1
28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.