Job 4
1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: 1
2நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? 1 ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? 1
3இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, 1 சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர். 1
4விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், 1 தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். 1
5இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; 1 அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். 1
6உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், 1 உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ? 1
7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? 1 சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? 1 இதை நினைத்துப்பாரும்.
8நான் கண்டிருக்கிறபடி, 1 அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், 1 அதையே அறுக்கிறார்கள். 1
9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, 1 அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். 1
10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; 1 பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும். 1
11கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், 1 பாலசிங்கங்கள் சிதறிப்போகும். 1
12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, 1 அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது. 1
13மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, 1 இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, 1
14பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, 1 என் எலும்புகளெல்லாம் நடுங்கியது. 1
15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, 1 என் உடலின் முடிகள் சிலிர்த்தது. 1
16அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, 1 ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; 1 அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: 1
17மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? 1 மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ? 1
18கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; 1 தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே, 1
19புழுதியில் அஸ்திபாரம் போட்டு, 1 மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் 1 அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? 1
20காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, 1 கவனிப்பார் ஒருவருமில்லாமல், 1 நிலையான அழிவை அடைகிறார்கள். 1
21அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? 1 ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.