Psalms 101
1இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; 1 யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன். 1
2உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; 1 எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! 1 என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். 1
3தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; 1 வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; 1 அது என்னைப் பற்றாது. 1
4மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; 1 பொல்லாதவனை ஏற்கமாட்டேன். 1
5பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; 1 பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 1
6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; 1 உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். 1
7கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; 1 பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை. 1
8அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, 1 தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.