Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 17

1யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், 1 என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; 1 பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் 1 என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 1

2உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; 1 உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக. 1

3நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, 1 இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் 1 ஒன்றும் காணாமலிருக்கிறீர்; + 17:3 மற்றவர்களைப் போல தீமை பேசுகிறதில்லை.என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன். 1

4மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே 1 தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன். 1

5என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. 1 என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை. 1

6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், 1 ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, 1 என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும். 1

7உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து 1 உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! 1 உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும். 1

8கண்மணியைப்போல் என்னைக் காத்து. 1

9என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், 1 என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, 1 உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். 1

10அவர்கள் கொழுத்துப்போய், 1 தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள். 1

11நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; 1 எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன. 1

12பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், 1 மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள். 1

13யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் 1 என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். 1

14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1

15நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; 1 நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.

← Psalms 16Read In The App, Free →Psalms 18 →

Study Psalms 17

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150