Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 103

1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; 1 என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று. 1

2என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; 1 அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. 1

3அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, 1 உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, 1

4உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, 1 உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, 1

5நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; 1 கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது. 1

6ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். 1

7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார். 1

8யெகோவா உருக்கமும், இரக்கமும், 1 நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். 1

9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; 1 என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை. 1

10அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், 1 நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். 1

11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, 1 அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. 1

12மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, 1 அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். 1

13தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, 1 யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். 1

14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; 1 நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். 1

15மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; 1 வெளியின் பூவைப்போல் பூக்கிறான். 1

16காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; 1 அது இருந்த இடமும் இனி அதை அறியாது. 1

17யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், 1 அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது. 1

18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. 1

19யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; 1 அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது. 1

20யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, 1 அவருடைய வசனத்தின்படி செய்கிற 1 பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, 1 அவரைத் துதியுங்கள். 1

21யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, 1 அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, 1 அவரைப் போற்றுங்கள். 1

22யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, 1 அவரைப் போற்றுங்கள்; 1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.

← Psalms 102Read In The App, Free →Psalms 104 →

Study Psalms 103

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150