Psalms 97
1யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, 1 திரளான தீவுகள் மகிழட்டும். 1
2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; 1 நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 1
3நெருப்பு அவருக்கு முன்சென்று, 1 சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது. 1
4அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; 1 பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. 1
5யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, 1 சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது. 1
6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; 1 எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 1
7சிலைகளை வணங்கி, 1 விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; 1 தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 1
8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். 1
9யெகோவாவே, பூமி அனைத்திற்கும் 1 நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். 1
10யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; 1 அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, 1 துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். 1
11நீதிமானுக்காக வெளிச்சமும், 1 செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 1
12நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, 1 அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.