Psalms 5
1யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், 1 என்னுடைய தியானத்தைக் கவனியும். 1
2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; 1 என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 1
3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; 1 காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 1
4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; 1 தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 1
5வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; 1 அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர். 1
6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; 1 கொலை வெறியர்களையும் 1 வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார். 1
7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, 1 உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 1
8யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, 1 எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். 1
9அவர்கள் வாயில் உண்மை இல்லை, 1 அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; 1 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; 1 தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 1
10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; 1 அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; 1 அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; 1 உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே. 1
11உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, 1 எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; 1 நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; 1 உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக. 1
12யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, 1 கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.