Psalms 111
1அல்லேலூயா, 1 செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். 1
2யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், 1 அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. 1
3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, 1 அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். 1
4அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், 1 யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். 1
5தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; 1 தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். 1
6தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், 1 தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 1
7அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; 1 அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். 1
8அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், 1 அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். 1
9அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, 1 தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; 1 அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 1
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; 1 அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.