Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 146

1அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, 1 யெகோவாவை துதி. 1

2நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; 1 நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். 1

3பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். 1

4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; 1 அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். 1

5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, 1 தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 1

6அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; 1 அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 1

7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; 1 பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; 1 கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். 1

8குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; 1 விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். 1 நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். 1

9அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; 1 அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; 1 துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். 1

10யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; 1 சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். 1 அல்லேலூயா.

← Psalms 145Read In The App, Free →Psalms 147 →

Study Psalms 146

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150