Psalms 75
1உம்மைத் துதிக்கிறோம், 1 தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; 1 உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது. 1
2நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். 1
3பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; 1 அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) 1
4வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; 1 துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். 1
5உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; 1 உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். 1
6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. 1
7தேவனே நியாயாதிபதி; 1 ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 1
8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, 1 அதிலிருந்து ஊற்றுகிறார்; 1 பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 1
9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, 1 யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். 1
10துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; 1 நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.