Psalms 99
1யெகோவா ராஜரிகம்செய்கிறார், 1 மக்கள் தத்தளிப்பார்களாக; 1 அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், 1 பூமி அசைவதாக. 1
2யெகோவா சீயோனில் பெரியவர், 1 அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர். 1
3மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; 1 அது பரிசுத்தமுள்ளது. 1
4ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, 1 தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; 1 நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். 1
5நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, 1 அவர் பாதத்தைப் பணியுங்கள்; 1 அவர் பரிசுத்தமுள்ளவர். 1
6அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், 1 அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், 1 யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; 1 அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார். 1
7மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; 1 அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் 1 அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். 1
8எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, 1 நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; 1 நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், 1 அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர். 1
9நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, 1 அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; 1 நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.