Psalms 20
1ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; 1 யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 1
2அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, 1 சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. 1
3நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, 1 உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா) 1
4அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, 1 உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. 1
5நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; 1 உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக. 1
6யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் 1 என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; 1 தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, 1 தமது பரிசுத்த வானத்திலிருந்து 1 அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார். 1
7சிலர் இரதங்களைக்குறித்தும், 1 சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; 1 நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். 1
8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; 1 நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 1
9யெகோவாவே, இரட்சியும்; 1 நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.