Psalms 105
1யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், 1 அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 1
2அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; 1 அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 1
3அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 1
4யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; 1 அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள். 1
5அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! 1 அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! 1
6அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், 1 அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். 1
7அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, 1 அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். 1
8ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், 1 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், 1
9அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
10அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், 1 இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: 1
11உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். 1
12அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள். 1
13அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், 1 ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள். 1
14அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், 1 அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: 1
15நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், 1 என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். 1
16அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். 1
17அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; 1 யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். 1
18அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; 1 அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது. 1
19யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை 1 அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. 1
20ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; 1 மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான். 1
21தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், 1 தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும், 1
22அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், 1 தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார். 1
23அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; 1 யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான். 1
24அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, 1 அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார். 1
25தம்முடைய மக்களைப் பகைக்கவும், 1 தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், 1 அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். 1
26தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். 1
27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், 1 காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். 1
28அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; 1 அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை. 1
29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, 1 அவர்களுடைய மீன்களை சாகடித்தார். 1
30அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; 1 அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. 1
31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. 1
32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, 1 அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார். 1
33அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, 1 அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். 1
34அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, 1
35அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, 1 அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. 1
36அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், 1 அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார். 1
37அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; 1 அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. 1
38எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். 1
39அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, 1 இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார். 1
40இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; 1 வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். 1
41கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது. 1
42அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், 1 தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து, 1
43தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், 1 தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து, 1
44தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், 1 தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், 1
45அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; 1 அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். 1 அல்லேலூயா.