Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 118

1யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக. 1

3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. 1

4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, 1 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. 1

5நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், 1 யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். 1

6யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; 1 மனிதன் எனக்கு என்ன செய்வான்? 1

7எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; 1 என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன். 1

8மனிதனை நம்புவதைவிட, 1 யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். 1

9பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். 1

10எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1

11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1

12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1

13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; 1 யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். 1

14யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; 1 அவர் எனக்கு இரட்சிப்புமானார். 1

15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; 1 யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 1

16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; 1 யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 1

17நான் சாகாமல், பிழைத்திருந்து, 1 யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன். 1

18யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், 1 என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 1

19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; 1 நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன். 1

20யெகோவாவின் வாசல் இதுவே; 1 நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள். 1

21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், 1 நான் உம்மைத் துதிப்பேன். 1

22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, 1 மூலைக்குத் தலைக்கல்லானது. 1

23அது யெகோவாவாலே ஆனது, 1 அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 1

24இது யெகோவா உண்டாக்கின நாள்; 1 இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம். 1

25யெகோவாவே, இரட்சியும்; 1 யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும். 1

26யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; 1 யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து 1 உங்களை ஆசீர்வதிக்கிறோம். 1

27யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; 1 பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். 1

28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; 1 நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். 1

29யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது.

← Psalms 117Read In The App, Free →Psalms 119 →

Study Psalms 118

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150