Psalms 96
1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள். 1
2யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, 1 நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள். 1
3தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், 1 எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். 1
4யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. 1
5எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; 1 யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர். 1
6மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, 1 வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. 1
7மக்களின் வம்சங்களே, 1 யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், 1 கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 1
8யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, 1 காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள். 1
9பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; 1 பூமியில் உள்ளவர்களே, 1 நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 1
10யெகோவா ராஜரிகம்செய்கிறார், 1 ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். 1 அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள். 1
11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, 1 கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக. 1
12நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; 1 அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும். 1
13அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; 1 அவர் உலகத்தை நீதியோடும், 1 மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.