Psalms 129
1என்னுடைய சிறுவயது முதற்கொண்டு 1 அநேகமுறை என்னை நெருக்கினார்கள். 1
2என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், 1 என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். 1
3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, 1 தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 1
4யெகோவாவோ நீதியுள்ளவர்; 1 துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, 1 இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 1
5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். 1
6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; 1 அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். 1
7அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், 1 அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. 1
8யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; 1 யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் 1 என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.