Psalms 29
1தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; 1 கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 1
2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; 1 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். 1
3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; 1 மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; 1 யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 1
4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; 1 யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. 1
5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; 1 யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். 1
6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், 1 சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். 1
7யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். 1
8யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; 1 யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார். 1
9யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, 1 காடுகளை வெளியாக்கும்; 1 அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் 1 யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். 1
10யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; 1 யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். 1
11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; 1 யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, 1 அவர்களை ஆசீர்வதிப்பார்.