Psalms 138
1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; 1 தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 1
2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, 1 உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; 1 உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். 1
3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; 1 என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; 1
4யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் 1 உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். 1
5யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், 1 அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். 1
6யெகோவா உயர்ந்தவராக இருந்தும், 1 தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; 1 மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். 1
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; 1 என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; 1 உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். 1
8யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; 1 யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; 1 உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.