Psalms 8
1எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 1 உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! 1 உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 1
2விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, 1 தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர். 1
3உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், 1 நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 1
4மனிதனை நீர் நினைக்கிறதற்கும், 1 மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 1
5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; 1 மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர். 1
6உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. 1
7ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 1
8ஆகாயத்துப் பறவைகளையும், 1 கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 1
9எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 1 உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!