Psalms 115
1எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, 1 உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். 1
2அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே 1 என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? 1
3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; 1 தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். 1
4அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், 1 மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. 1
5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; 1 அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 1
6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; 1 அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 1
7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; 1 அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; 1 தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 1
8அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், 1 அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 1
9இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; 1 அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 1
10ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; 1 அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 1
11யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, 1 யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 1
12யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், 1 அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், 1 அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். 1
13யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், 1 சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். 1
14யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். 1
15வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 1
16வானங்கள் யெகோவாவுடையவைகள்; 1 பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். 1
17இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் 1 யெகோவாவை துதிக்கமாட்டார்கள். 1
18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் 1 யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். 1 அல்லேலூயா.