Psalms 80
1இஸ்ரவேலின் மேய்ப்பரே, 1 யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, 1 செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும். 1
2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, 1 எங்களைக் காப்பாற்ற வந்தருளும். 1
3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 1
4சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் 1 எதுவரைக்கும் கோபங்கொள்வீர். 1
5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், 1 மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். 1
6எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; 1 எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள். 1
7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 1
8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, 1 தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். 1
9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; 1 அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. 1
10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது. 1
11அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், 1 தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது. 1
12இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, 1 அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? 1
13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, 1 வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. 1
14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, 1 இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்; 1
15உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும். 1
16அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; 1 உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். 1
17உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக. 1
18அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; 1 எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம். 1
19சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.