Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 77

1நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், 1 என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், 1 அவர் எனக்குச் செவிகொடுத்தார். 1

2என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; 1 இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; 1 என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. 1

3நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; 1 நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா) 1

4நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; 1 நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன். 1

5ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன். 1

6இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, 1 என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; 1 என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. 1

7ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? 1 இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ? 1

8அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? 1 வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ? 1

9தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? 1 கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா) 1

10அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; 1 ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன். 1

11யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், 1 உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; 1

12உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, 1 உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். 1

13தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; 1 நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? 1

14அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; 1 மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர். 1

15யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, 1 உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா) 1

16தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, 1 தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; 1 ஆழங்களும் கலங்கினது. 1

17மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; 1 ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; 1 உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. 1

18உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; 1 மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. 1

19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; 1 உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. 1

20மோசே ஆரோன் என்பவர்களின் கையால், 1 உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.

← Psalms 76Read In The App, Free →Psalms 78 →

Study Psalms 77

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150