Psalms 33
1நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; 1 துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். 1
2சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, 1 பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். 1
3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். 1
4யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், 1 அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. 1
5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; 1 பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. 1
6யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், 1 அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. 1
7அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, 1 ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். 1
8பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; 1 உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. 1
9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 1
10யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, 1 மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். 1
11யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், 1 அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். 1
12யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், 1 அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. 1
13யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். 1
14தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். 1
15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். 1
16எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; 1 போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். 1
17காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; 1 அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. 1
18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; 1
19பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், 1 யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. 1
20நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; 1 அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 1
21அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், 1 நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். 1
22யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.